மனோஜ் பிரபாகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டேராடூன்:

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் அளவிற்கு பொது மக்கள்பணத்தை மோசடி செய்யததாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட்வீரர் மனோஜ் பிரபாகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏபேஸ் என்ற நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு, அங்கு முதலீடுசெய்யப்பட்ட பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்யததாக இந்தியாவின்முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரை உத்தராஞ்சல் மாநில போலீசார் தேடி வந்தனர். அவர்ஜெய்ப்பூரில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதால் அங்கு போலீசார் தேடி சென்றனர்.ஆனால் அவர் அங்கு இல்லை.

அதன் பின் உத்தராஞ்சல் போலீசார் டெல்லி போலீசார் உதவியை நாடினர். மனோஜ்பிரபாகர் வீடு டெல்லியில் இருப்பதால் அவரை கண்டு பிடித்து கைது செய்ய உதவுமாறுடெல்லி போலீசின் உதவி நாடப்பட்டது. ஆனால் மனோஜ் பிரபாகர் டெல்லியிலும்சிக்கவில்லை.

சில தினங்களுக்கு முன் மனோஜ் பிரபாகர் உத்தராஞ்சல் வந்து தான் நிரபராதி, தனக்கும்ஏபேஸ் நிறுவனத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும், தானே அந்தநிறுவனத்தில் ரூ. 25 லட்சம் மூதலீடு செய்திருப்பதாகவும், அதை எவ்வாறு திரும்பப்பெறுவது என யோசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை மனோஜ் பிரபாகரைத் தேடி வந்த ஹால்ட்வானி போலீசார்அவரை டெல்லியில் கைது செய்தனர். பின்னர் அவரை ஹால்ட்வானி கொண்டுசென்றனர். அவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியதால் அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மனோஜ் பிரபாகர் தன்னை ஜாமீனில் விட வேண்டும் என ஹால்ட்வானி நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு ஹால்ட்வானி கீழ் நீதமன்றத்தாலும்,நைனிடால் நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டது.

உத்தராஞ்சலின் துணை டி.ஜி.பி. அனில் கே. ரதூரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரபாகரை ஜாமீனில் விட வேண்டும் என அவரது வழக்கறிஞர் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தார். இவை கீழ் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

இந்த மாதம் 13ம் தேதி ஜாமீன் மனு மீதான மறு விசாரணை நைனிடால்மாவட்டநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபாகரின் உடல் நிலைசீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் கிருஷ்ணா மருத்துவமனைமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்மனோஜ் பிரபாகருக்கு 5 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாடக்கூடாது எனதண்டனை விதித்தது நினைவுகூற தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+