மத்திய அமைச்சர் என்றாலும் கைது தான்: ம.பி. முதல்வர்

Subscribe to Oneindia Tamil

போபால்:

மத்திய அமைச்சர்களாகவே இருந்தாலும் கூட சட்டத்தை மீறினால் கைது செய்வதில் தவறில்லை என மத்தியப்பிரதேச முதல்வர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

என்னை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என மத்திய விளையாட்டுத்துளை அமைச்சர் உமா பாரதி சவால்விட்டிருப்பது குறித்து திக்விஜய்யிடம் நிருபர்கள் கேட்டனர்,

சமீபத்தில் இந்து தீவிரவாத அமைப்பான பஞ்ரங் தள்ளில் சேர்ந்துள்ள உமா பாரதி இப்படி சவால் விட்டிருப்பதாகக்கூறுகிறீர்கள், அவர் எனது மாநிலத்தில் வந்து சட்டத்தை மீறிப் பார்க்கட்டும் அப்புறம் தெரியும் நான் யார் என்பதுஎன்றார்.

சட்டத்தை மீறினால் நிச்சயம் அவரை கைது செய்வேன். எனக்கு காங்கிரசின் மதசார்பின்மை கொள்கையைநிறைவேற்றுவது தான் முதல் வேலை. இங்கு வந்து உமா பாரதி மதரீதியில் வாலாட்டினால் நான் யார் என்பதைக்காட்டுவேன், அவர் மத்திய அமைச்சராக இருந்தாலும் சரி, நிச்சயம் ஜெயிலுக்குள் தள்ளுவேன்.

யாராய் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான் என்றார் திக்விஜய் சிங்.

ஆனால், கருணாநிதியின் வயதைக் கருதி அவரிடம் ஜெயலலிதா கொஞ்சம் நிதானமாக நடந்திருக்க வேண்டும்என்றார் சிங்.

திக்விஜய்யுடன் உமா பாரதி மோதுவது இது முதல்முறையல்ல. வெட்டி சவடால்கள் விடுவதில் கைதேர்ந்தவர் உமாபாரதி. முன்பு ஒரு முறை போபாலில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாகதிக்விஜய்யுடன் மோதி மூக்கு உடைபட்டார்.

சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்துவிட்டு பசி எடுத்ததும் அதை கைவிட்டார். இவரது அடாவடி ஸ்டைலைவாஜ்பாய் கூட விரும்புவதில்லை. ஒரு முறை மாநில அரசுடன் சண்டை போட்டுவிட்டு மத்திய அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார். அதை அமைதியாக ஏற்றுக் கொண்டார் வாஜ்பாய்.

அரசியலைவிட்டு விலகுவதாக ஒருமுறை அறிவித்துவிட்டு சில வாரங்களில் மீண்டும் மத்திய அமைச்சர் பதவியைக்கேட்டுப் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+