மதுரை சிறையிலிருந்து ஸ்டாலின் விடுதலையானார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
பாலங்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை9.18 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்.
அவருக்கு நேற்றே ஜாமீன் வழங்கி சென்னை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், இந்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்திடம் இருந்து வந்த பின்னர் தான் அவரை விடுதலைசெய்வோம் என மதுரை சிறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இதையடுத்து இந்த ஒரிஜினல் ஆவணங்கள் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவை சனிக்கிழமை காலை சிறைஅதிகாரிகளிடம் தரப்பட்டன. இதையடுத்து ஸ்டாலின் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications