தொட்டில் குழந்தைகளைக் கேட்கிறது குருகுலம்
சென்னை:
தொட்டில் குழந்தைகளை வளர்க்கத் தயாராக இருப்பதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சிவானந்தாகுருகுலம் நிர்வாகி ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
தொட்டில் குழந்தைத் திட்டத்தை அதிமுக அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். பெண்குழந்தைகளை வளர்க்க விருப்பமில்லாதவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அனாதை இல்லங்களுக்குக் குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர். அப்படி அனுப்பப்படும் குழந்தைகளை எங்களுக்குக் கொடுக்கலாம்.
இவ்வாறு எங்களிடம் குழந்தைகளுடன், தொட்டில் குழந்தைகளையும் நாங்கள் வளர்ப்பதற்குத் தயாராகஇருக்கிறோம்.
மேலும், தற்போது நாங்கள் சில தொட்டில் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் தயாராக இருக்கிறோம். எங்கள்கோரிக்கையைப் பரிசீலனை செய்யுங்கள் என்று அந்தக் கடிதத்தில் ராஜாராம் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications