இன்று முதல் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில்
நாகர்கோவில்:
நாகர்கோவில்-ஹவுராவுக்கிடையே அறிமுகப்படுத்தப் பட்டுள்ள "குருதேவ் எக்ஸ்பிரஸ்" ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் 1.30 மணிக்குக் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடந்த இந்த துவக்க விழாவில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கேரளாவின் சமூக சிந்தனையாளர் ஸ்ரீ நாராயண குருவின் நினைவாக, இந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, "குருதேவ்எக்ஸ்பிரஸ்" என்று பெயர் வைக்கப்பட்டது என்று ராஜகோபால் தெரிவித்தார்.
அடுத்த பட்ஜெட்டின் போது, நாகர்கோவில்-டெல்லிக்கு இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையும், நாகர்கோவில்வழியாக திருவனந்தபுரம்-சென்னைக்கு இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையும் அறிமுகப்படுத்த மத்திய ரயில்வேஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று மேலும் கூறினார் ராஜகோபால்.
விரைவில் நாகர்கோவில் ரயில்வே நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.