தடயவியல் நிபுணர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் தம்பிதுரை
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை, போலீஸார் அனிமேஷன் செய்து மாற்றியுள்ளனர் என்றுகூறியுள்ள தடயவியல் நிபுணர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை போலீஸார் எடிட்செய்து, அனிமேஷன் மூலமாக, சிபிசிஐடி டிஐஜியான முகமது அலியை முரசொலி மாறன் அடிப்பது போன்றகாட்சியை அமைத்துள்ளனர் என்று தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இது அப்பட்டமான பொய். இவருடைய இந்தக் கருத்து உள்நோக்கமுடையது.
முன்பொரு முறை, ஒரு கொலை வழக்கில், மண்டையோடு ஒன்றை ஆராய்ந்த டாக்டர் சந்திரசேகர"ன்,பாண்டியம்மாள் என்ற பெண்ணுடைய மண்டையோடுதான் என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால், அந்த பாண்டியம்மாள் நேரடியாக உயிருடன் கோர்ட்டில் வந்து நின்றதை அனைவரும் அறிவார்கள்.டாக்டர் சந்திரசேகரன் தடவியலில் எவ்வளவு சிறப்பு மிக்கவர் (?) என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடுதான், டாக்டர் சந்திரசேகர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். முந்தைய அதிமுகஆட்சிக் காலத்தில், அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்காத காரணத்தால், தேவையில்லாமல் இப்போது இத்தகையஅறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இது அவருக்குத் தேவையில்லாத வீண் வேலை. அவர், தன் தொழிலையே கேவலப் படுத்திக் கொண்டிருக்கிறார்.இதற்காக, டாக்டர் சந்திரசேகரன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்றார் தம்பிதுரை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications