கட்சிக்கு பணம் வசூலிப்பதில் தான் ஊழல் ஆரம்பிக்கிறது
Subscribe to Oneindia Tamil
கோவை:
தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைகமிஷனர் விட்டல் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் ரோட்டரி கிளப் நடத்திய ஒரு விழாவில் அவர் மேலும் கூறியதாவது:
தங்கள் கட்சிக்கென அரசியல்வாதிகள் வசூலிக்கும் தொகையில் பெரும்பாலானது கறுப்புப் பணம்தான்.இங்கிருந்துதான் ஊழல் ஆரம்பமாகிறது. கட்சிக்கு பணம் வசூல் செய்வதில் தான் ஊழலே துவங்குகிறது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஊழல் தலை விரித்து ஆடும்நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார் விட்டல்.
ஆனால், நிச்சயம் ஊழலற்ற நாடாக இந்தியா மாறிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications