ஜெ. Vs
ஆனால், அவர் முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குக் கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவர்பதவி ஏற்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் எனக்கு தகவல் வந்தது.
அவர் முதல்வரானதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, நான் 2 நாட்கள் சென்னையில் காத்திருந்தேன். அதைஅவர் பொருட்படுத்தவில்லை. எனவே நான் சென்னையிலிருந்து திரும்பி விட்டேன். இதுதான் அவர் எனக்குகொடுத்த மரியாதையா?
ராஜ்பவனில் அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது, பொதுமக்கள் அமர்ந்திருந்த பகுதியில் தான் என்னைஅமர வைத்தார்.இதுதான் அவர் கூட்டணி கட்சி தலைவருக்கு தரும் மரியாதையா?
நான் ஜெயலலிதாவை வாழ்த்தி பூச்செண்டு கொடுத்த போது, அவர் என்னை உட்கார கூட சொல்லவில்லை. நான்நின்று கொண்டுதான் இருந்தேன். ஆளுநர் தான் எனக்கு இருக்கை தந்து அமரச் சொன்னார்
எங்கள் கட்சியில் 20 எம்,எல்.ஏக்கள் இருப்பதால் எங்களுக்கு 1 ராஜ்ய சபா எம்.பி பதவி ஒதுக்கப்பட வேண்டியதுநியாயமானதுதான். ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெறும் வரை கூட்டணிக் கட்சிகளை மரியாதையாகநடத்துவார். தேர்தலில் வென்ற பின் அவமரியாதையாக நடத்துவார். இது அவரது வழக்கம்தான்.
பாண்டிச்சேரியில் பெயருக்காக எங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்என்பதற்காக அக்கட்சியோடு ரகசியக் கூட்டணி வைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
நடந்து முடிந்த சட்டசபை தேர்ததலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது கூட்டணிக் கட்சிகளால்தானே தவிர, அதன் தனிபலத்தால் அல்ல என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.