For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கு கங்கைத் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1983-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பொதுப் பணித்துறை பொறியாளர்களிடம் புதிய திட்டம்ஒன்றைத் தருமாறு கோரினார்.

இதையடுத்து அப்போது தலைமைப் பொறியாளராக இருந்த சி.ஏ.சீனிவாசன் தலைமையிலான பொறியாளர் குழு சென்னைக் கால்வாய் திட்டத்தை(இதுகுறித்துத் தனியே விரிவாக தரப்பட்டுள்ளது) அரசிடம் கொடுத்தது.

மிகவும் சிறந்த திட்டமாகவும், செலவு குறைந்த திட்டமாகவும் (அன்றைய நிலையில் ரூ. 210 கோடி) கருதப்பட்ட இத் திட்டம் அரசிடம் வெகுவிரைவாக வழங்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினை நிரந்தரமாக தீரும் என்றும் அரசுக்குஅறிவுறுத்தப்பட்டது.

ஆனால், எம்.ஜி.ஆருக்கும், ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட நெருக்கம் மற்றும் நட்பு காரணமாகஇத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மாறாக, தெலுங்கு கங்கைத் திட்டம் உருவானது.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நான்கு தென் மாநில முதல்வர்களின் முன்னிலையில், தமிழகமும் ஆந்திரமும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கானஉடன்பாட்டில் கையெழுத்திட்டன.

1983-ம் ஆண்டு மே 25ம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு 12 டி.எம்.சி தண்ணீரை விட ஆந்திரம் ஒப்புக் கொண்டது.

இதற்காக ஸ்ரீசைலம் அணையிலிருந்து கண்டலேறு அணை வழியாக தமிழக எல்லைக்கு கிருஷ்ணா நீரைக் கொண்டு வருவதற்கானசெலவை தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கு சீனிவாசன் தலைமையிலான பொறியாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாகதனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் அப்போதைய தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் மற்றும்நிதித்துறைச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் பலனில்லை.

தற்போது ஆந்திரத்திடம் பணத்தையும் கொடுத்து விட்டு தண்ணீருக்காக கெஞ்சிக் கொண்டுள்ளோம். கையில் வெண்ணைஇருக்கும்போது நெய்க்கு அலைந்த கதையாக சென்னைக் கால்வாய் திட்டத்தை புறக்கணித்து விட்டு தெலுங்கு கங்கைத் திட்டத்தைநிறைவேற்றியது அப்போதைய அரசு.

தெலுங்கு கங்கைத் திட்டத்தின் சில துளிகளை இங்கு பார்ப்போம்:

  • தெலுங்கு கங்கைத் திட்சடத்தின்படி மொத்தம் 4000 கியூசெக் (விநாடிக்கு 4000 கன அடி) நீர் திறந்து விடப்படும். இதில் 1000 கன அடி நீர் சென்னைக் குடிநீருக்கானது. மீதமுள்ள தண்ணீர் ஆந்திர மாநிலத்திலுள்ள 3 லட்சம் ஹெக்டேர் பாசன நிலத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு.

  • திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் கால்வாயின் மொத்த நீளம் 152 கிலோமீட்டர். இதில் 25 கிலோமீட்டர் தொலைவு ஆந்திர எல்லைக்குள் இருக்கிறது. மீதமுள்ள பகுதி தமிழக எல்லைக்குள் இருக்கிறது.

  • ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலத்திற்கான (கர்னூர் மாவட்டம்) பாசனப் பகுதிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த மாவட்சத்தில் பாசன நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், எங்களுக்குப் போகத்தான் தமிழகத்திற்கு நீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலை வரும். ஆனால் இதை நாம் அனுமதிக்க முடியாது. நமக்குத் தேவையான தண்ணீருக்காக பணம் கொடுத்துள்ளோம். சட்டப்படி ஒப்பந்தம் செய்துள்ளோம்.

  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X