Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கு கங்கைத் திட்டம்

Subscribe to Oneindia Tamil

பரம்பிக்குளம்-ஆழியாறு இடையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயைப் போலவே இந்தக் கால்வாயை அமைக்கலாம்.

காவிரியில் வெள்ளம் அதிகரிக்கும் நேரங்கள் மற்றும் மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்படும்போதுஅதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கால்வாயின் உயரத்தை கூட்டி அமைக்கலாம். அதுவும் கூட முதன்மை மதகு உள்ளஇடத்தில் மட்டும் உயரத்தை அதிகரித்தால் போதும்.

தற்போதுள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தவிர கூடுதலாக தேவைப்படுவது பணியாளர்களுக்கான குடியிருப்புகள்,கால்வாய் கண்காணிப்பு கோபுரங்கள், அலுவலகக் கட்டிடங்கள் போன்றவை மட்டுமே.

திட்டத்தின் பலன்கள்

  • பொதுப்பணித்துறை பொறியாளர்களை வைத்துக் கொண்டே இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற முடியும். பிற தொழில்நுட்ப வசதிகள் தேவையில்லை. நம்மிடம் உள்ள தொழில்நுட்ப அறிவே போதுமானது.

  • உ.யர் அழுத்த பம்பிங் கருவிகள் தேவையில்லை. பெரிய அளவிலான இயந்திரங்கள் தேவையில்லை. கருவிகளை நிர்மாணிப்பது, பராமரிப்பது போன்ற தலைவலிகள் இல்லை. பொதுப்பணித்துறை பணியாளர்களைக் கொண்டே இந்தப் பணிகளை செய்து முடிக்க முடியும்.

  • பம்பிங் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விட 10 மடங்கு அதிகமான தண்ணீரை இந்தத் திட்டத்தின் மூலம் பெற முடியும்.

  • மிகக் குறைந்த செலவே திட்டத்திற்கு ஆகும். பராமரிப்புப் பணியும் மிகவும் குறைவே.

  • வறண்ட, காலியிடங்கள் வழியாகவே கால்வாய் வெட்டப்படும். இதன் மூலம் குடிநீருக்கான இந்த தண்ணிரை யாரும் நீர்ப்பாசனத்திற்கோ அல்லது பிற பயன்பாட்டுக்கோ எடுப்பது தவிர்க்கப்படும்.

  • கால்வாய் வெட்டும் பணியின்போது உள்ளூர் மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பு கிடைக்கும்.

  • கால்வாய் வெட்டும் பணிக்குத் தேவைப்படும் இயந்திரங்கள் உள்ளூரிலேயே கிடைக்கும். இறக்குமதி செய்யத் தேவையில்லை. சென்னைக்கு மட்டுமல்லாது, வழியில் உள்ள பிற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் குடிநீர் வசதியைக் கொடுக்க முடியும்.

  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அனுமதி மட்டும் இதற்குப் போதுமானது.

  • 1991ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேட்டூர் அணையிலில் காவிரி நீரின் இருப்பு 280 டிஎம்சி ஆகும். எனவே 15 டிஎம்சி தண்ணீரை எடுப்பதால் நீர்ப்பாசன பயன்பாட்டிற்கான காவிரி நீரின் தேவையில் பாதிப்பு ஏற்படாது.

  • வீராணம் திட்டத்திற்கும், சென்னைக் கால்வாய் திட்டத்திற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசமே, வீராணம் திட்டத்தால் சென்னையின் தண்ணீர் தேவையை முழுமையாகவும், எப்போதும் நிறைவேற்ற முடியாது. மேலும், வீராணம் ஏரியை நம்பி 14.5 லட்சம் ஹெக்டேர் பாசன நிலங்கள் உள்ளன. ஆனால் சென்னைக் கால்வாய் திட்டத்தில் இந்தப் பிரச்சினை கிடையாது.

  • வீராணம் திட்டத்தை விட 10 மடங்கு தண்ணீர் கிடைக்கும்.

  • நமது மாநிலத்திற்குள்ளேயே இருப்பதால் காவிரியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு எந்த மாநிலத்தின் இசைவும் தேவையில்லை. குறிப்பாக தொல்லைபிடித்த கர்நாடகத்தின் அனுமதி தேவையில்லை. காவிரி நதி நீர்ப் பிரச்சினையிலிருந்து சம்பந்தமில்லாதது இது.

  • இத் திட்டத்திற்கு மொத்தம் 800 முதல் 900 கோடி ரூபாய்வரையே செலவாகும்.

  • திட்டம் நிறைவேறினால் பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் ராமஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறு நீர் சேமிப்பு திட்டங்களுக்கு விடை கொடுக்கலாம். இந்தத் திட்டங்கள் மக்கள் எதிர்ப்பையும் மீறி அமல்படுத்தப்பட்டவை.

  • செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டியில் நீர்த் தேக்கங்களின் உயரத்தை மேலும் 2 அடி கூட்டுவது என்ற முடிவையும், இத்திட்டம் நிறைவேறினால் கைவிட்டு விடலாம். இதன் மூலம் அப்பகுதியில் 400 ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்குவது தடுக்கப்படும்.

  • இதை விட முக்கியமானது, ரயில்கள், லாரிகள் மூலம் ஏராளமான பொருட் செலவில் தண்ணீரைக் கொண்டு வருவதன் மூலம் பாழாகும் பெருமளவிலான நிதி இழப்பைத் தவிர்க்க முடியும்.

  • 3 ஆண்டுகளுக்குள் மொத்த கட்டுமானப் பணியையும் முடித்து விடலாம். நிலங்களை கையகப்படுத்துவது மட்டுமே மிகப் பெரிய பணியாக இருக்கும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்ட சிக்கல்களை தீர்க்க தீவிர முயற்சி கொள்வது மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக கொடுத்து விட்டால் இந்தச் சிக்கல் தீரும்.

  • More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+