ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ. பதவியேற்றார்
சென்னை:
தமிழக சட்டசபைக்கு ஆங்கிலோ இந்திய எம்எல்ஏவாக சேன்ட்ரோ டான் கிரேவல் என்ற பெண் செவ்வாய்க்கிழமைபதவியேற்றார்.
ஒவ்வொரு முறை சட்டசபைக்குத் தேர்தல் நடக்கும் போதும், புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும். புதிதாகத்தேர்ந்தெடுக்கப்படும் அந்த சட்டசபையில், ஆங்கிலோ இந்தியர்களுக்கும் ஒரு எம்எல்ஏ சீட் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில், தற்போதைய சட்டசபைக்கு கிரேவல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சபாநாயகர் காளிமுத்துபதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
"கடவுள் ஆசியால் எனக்கு இந்தப் பதவி கிடைத்துள்ளது. ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்வதற்காகஇப்பதவியைப் பயன்படுத்துவேன். ஆங்கிலோ இந்தியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்குமுயற்சிப்பேன்" என்று பதவியேற்றபின் கிரேவல் கூறினார்.
சென்னையை அடுத்த பரங்கிமலையில் சமூக சேவை செய்துவரும் கிரேவலின் கணவர் டான்கிரேவல் பஞ்சாபில்டெலிகாம் மானேஜராகப் பணிபுரிகிறார்.