மனித உரிமை கமிஷனிடம் "டைம்" கேட்கிறார் ஜெ.
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை கமிஷனிடம்கால அவகாசம் கேட்டுள்ளது தமிழக அரசு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் நடந்ததாக அறிந்ததையடுத்து,இதுகுறித்த அறிக்கை ஒன்றை அனுப்புமாறு தேசிய மனித உரிமை கமிஷன், தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது.
தமிழக தலைமைச் செயலாளருக்கும் மாநில போலீஸுக்கும் கடந்த ஜூலை 2ம் தேதி அனுப்பிய உத்தரவில், ஒருவாரத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ஒரு வாரத்துக்குள் தமிழக அரசால் அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியவில்லை.
இதையடுத்து, தங்களுடைய பதில் அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும்என்று மனித உரிமை கமிஷனிடம் தமிழக அரசு கோரியுள்ளது.
வரும் வியாழக்கிழமை (நாளை) நடைபெறவிருக்கும் மனித உரிமை கமிஷன் கூட்டத்தில், தமிழக அரசுக்கு காலஅவகாசம் கொடுக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்படும்.