எஸ்.எஸ். சந்திரன் வீடு தாக்குதல்: 2 திமுகவினர் கைது
சென்னை:
நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் எஸ்.எஸ். சந்திரன் வீட்டின் முன் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதே போலவே, நடிகை விஜயசாந்தி வீடும், நடிகர்கள் சரத்குமார், குண்டு கல்யாணம், தியாகு ஆகியோர் வீடுகளும்தாக்குதலுக்கு உள்ளாகின. இதனால், கடந்த வாரம் "கோடம்பாக்கம்" கதி கலங்கிப் போய் இருந்தது.
இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் வட்டச் செயலாளர் பால் மனோ, மற்றொரு திமுக பிரமுகர்ராஜா ஆகியோர் சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசியதற்காக கைது செய்யப்பட்டனர்.
திங்கள்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர். கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் பால் மனோவும்,மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் ராஜாவும் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
வரும் ஜூலை 23ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக ராஜ்ய சபா தேர்தலில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகநிறுத்தப்பட்ட 4 பேரில் எஸ்.எஸ். சந்திரன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.