For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் டீத்தூள் விற்பனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் மூலம் டீத்தூளை விற்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சிறு தேயிலை விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு அவர்களிடமிருந்து மாதத்திற்கு 200 மெட்ரிக் டன் பச்சைத்தேயிலையை வாங்கிக் கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் பயிரிடும் பச்சைத் தேயிலைக்கு விலை குறைவாக இருப்பதால் அவர்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு உதவும் வகையில், அவர்களிடமிருந்து மாதந்தோறும்200 மெட்ரிக் டன் தேயிலையைவாங்கிக் கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தேயிலையை சிறு பொட்டலமாக்கி, ரேஷன் கடை மூலம் அதை விற்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த முடிவால் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அரசுதெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X