14ம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையில், வரும் ஜூலை 14ம் தேதி அதிமுக செயற்குழுகூடவிருக்கிறது.
தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளிட்டுள்ள அறிக்கையில், 14ம் தேதிகாலை 11 மணிக்குக் கூடுவதாக இருந்த அதிமுக செயற்குழுக் கூட்டம், அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்என்று கூறியுள்ளார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக செயற்குழு கூடவிருப்பதால், இக்கூட்டத்தில்இதுகுறித்த முக்கியமான முடிவுகளை அதிமுக எடுக்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) விலகிச் சென்றதற்குப் பிறகும் முதன் முதலாக அதிமுகசெயற்குழு கூடவிருப்பதால், தற்போது இக்கூட்டம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கருணாநிதி கைது சம்பவம் குறித்து மேலும் என்ன செய்யலாம், பாமக தற்போது விலகிச் சென்றுள்ளதால்,எதிர்காலத்தில் அக்கட்சியை எப்படி எதிர்கொள்வது, அடுத்த மாதம் கூடவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தில்பாமகவையும் மற்ற எதிர்க் கட்சிகளையும் எப்படிச் சமாளிப்பது உள்பட பல விவாதங்கள், அதிமுகவின்செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.