ஏற்றுமதியில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருள்கள்
ஜவுளி ஆடைகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 6மாதங்களில் இந்த வீழ்ச்சியின் விகிதம் மிகவும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியே, நம்முடைய ஏற்றுமதிக்கும் வீழ்ச்சியாகி விட்டதாகக்கருதப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் கூட்டத்தில், ஏற்றுமதி வீழ்ச்சிக்காக மேற்கொள்ளவிருக்கும்நடவடிக்கைகள் குறித்து, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் விவாதித்தார்.
இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவாதங்கள் குறித்தும் மத்திய நிதியமைச்சரிடமும், ரிசர்வ் பாங்க்கவர்னரிடமும் கலந்து ஆலோசிப்பதாகவும் மாறன் உறுதியளித்தார்.
கடந்த 2000ம் ஆண்டு 19.83 சதவிகிதம் என்ற அளவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த இந்தியாவின்ஏற்றுமதி விகிதம், இந்த ஆண்டு மே மாதத்துக்குள் அதல பாதாளத்தில் இறங்கி விட்டது. இதனால் மத்திய அரசுகொஞ்சம் கலங்கிப் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், கெமிக்கல்ஸ், இன்ஜினியரிங் கருவிகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் ஏற்றுமதி நன்றாகஇருந்ததுதான் ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications