சென்னையில் மதுக்கடைகள் ஏலம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் மதுக்கடை ஏலம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஏலம் நடந்த சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பல கட்சிகளின் கரை வேட்டிகளும், அம்பாசிடம் முதல்ஹூயுண்டாய் வரையிலான அனைத்து வகையான கார்களும் நூற்றுக்கணக்கில் அலங்கரித்தன.
சென்னை நகரில் மட்டும் 960 மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் குலுக்கல் மூலம்போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை தொடங்கிய இந்த குலுக்கல் முறையிலானகடைகள் ஒதுக்கீடு 18ம் தேதி வரை தொடரும்.
24ம் தேதி கடைகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உரிமம் (லைசென்ஸ்) வழங்கப்படும். அவர்கள் அடுத்த மாதம் 1ம்தேதி முதல் கடைகளை நடத்தலாம்.
இந்த மதுபானக் கடை ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 29 கோடி வருமானம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications