ஸ்டாலின் ஜாமீனை எதிர்த்து கோர்ட்டில் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேம்பால வழக்கில் கைதான சென்னை மேயர் மு.க. ஸ்டாலினுடைய ஜாமீனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் கடந்த ஜூலை 6ம் தேதி அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த ஜாமீனை உடனடியாக ரத்து செய்யுமாறு, அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், குற்றத்தை ஒப்புக் கொண்ட ஸ்டாலின் நீதிபதி முன் சரணடைந்ததால், அவர் குற்றம் செய்தவர் என்றுநிரூபணம் ஆகி விட்டதால், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றுஅந்த வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications