இன்று கூடுகிறது அ.தி.மு.க. செயற்குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பு ஏற்றபின் முதல் முறையாக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சனிக்கிழமை சென்னையில்கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பின் கட்சியில் செய்த மாற்றங்களுக்கு அங்கீகாரம்பெறவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் முதல்வரும்கட்சியின் தலைவருமான ஜெயலலிதா முடிவு எடுக்கிறார்.
மேலும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவராக புலவர் புலமைப்பித்தனும்,அ.தி.மு.கவின் துணை பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் முத்துசாமியும்பொறுப்பு ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர கருணாநிதி கைது, மத்திய அரசின் நெருக்குதல், கூட்டணியிலிருந்துபாட்டாளி மக்கள் கட்சி விலகியது ஆகிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications