பிரதமருடன் அத்வானி தீவிர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை சந்தித்த உள்துறை அமைச்சர் அத்வானி உடனடியாக பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்து தனது சந்திப்பின்போது பேசிய விவரத்தைத் தெரிவித்தார்.
சர்வதேச கடத்தல் பேர்வழியான தாவூத் இப்ராகிம் கராச்சியில் தான் ரகசியமாக தங்கியுள்ளான். அவனைஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், எல்லைக்கு அப்பால் இருந்து வந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களில்ஈடுபடும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தியவர்களைஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கைளை பர்வேசிடம் வைத்தார் அத்வானி.
இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆவணங்களையும் முஷாரபிடம் அத்வானி வழங்கினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் பிரதமரின் இல்லத்துக்கு விரைந்தார் அத்வானி. பின்னர் வாஜ்பாயிடம் 45நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications