காஷ்மீர் தான் முக்கிய பிரச்சனை என்கிறார் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் நிருபர்களிடம்பேசிய முஷாரப், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் தான் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் என்றார்.
வாஜ்பாயுடன் முறைப்படி பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்பாக, பாகிஸ்தானில் இருந்துவந்திறங்கவுடனேயே அவர் பேசியது இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
முஷாரப் கூறுகையில், காஷ்மீர் மக்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அந்தப் பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என நான் விரும்புகிறேன். என்னுடைய முயற்சிகளுக்கு இந்தியத் தலைவர்களும் உதவ வேண்டும்என்றார்.
முஷாரபின் இந்தப் பேச்சின் மூலம் காஷ்மீர் தான் இந்தப் பேச்சுவார்த்தையில் மிக முக்கிய இடம் வகிக்கப் போகிறதுஎனத் தெரிகிறது












Click it and Unblock the Notifications