இந்தியாவில் ஒலித்த பாகிஸ்தான் தேசியகீதம்
டெல்லி:
இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் முறையாக பாகிஸ்தானின் தேசிய கீதம்ஒலித்தது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு அளிக்கப்பட்டவரவேற்பின்போது அந் நாட்டு தேசிய கீதத்ததை இந்திய வீரர்கள் இசைத்தனர்.
பாகிஸ்தான் ஜனாதிபதி 3 நாள் விஜயமாக சனிக்கிழமை இந்தியா வந்தார். அவர்பிரதமர் வாஜ்பாயுடன் காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்துஞாயிற்றுக்கிழமை ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முஷாரப் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்க மேடை ஏறிய போது பாகிஸ்தானின்தேசிய கீதமான பாக் சர் சமீன் ஆஸ்மான் இசைக்கப்பட்டது. அது முடிந்த உடன் இந்தியதேசிய கீதமான ஜன கன மன இசைக்கப்பட்டது.
விமானநிலையத்திலிருந்து ராஷ்டிரபதி பவனுக்கு வரும் வழியில் பல இடங்களில்முஷாரப், அவரது மனைவி பேகம் ஷேபா ஆகியோரின் பெரிய புகைப்படங்கள்வைக்கப்பட்டிருந்தன.
அந்த பகுதியில் இந்திய, பாகிஸ்தான் கொடிகளும் பட்டொளி வீசி பறந்துகொண்டிருந்தன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications