மும்பை விபச்சார விடுதியிலிருந்து 10 தமிழ்ப் பெண்கள் மீட்பு
மும்பை:
மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் 10 தமிழ்ப் பெண்களை வைத்து விபச்சாரம்செய்து வந்த அலிகளிடமிருந்து போலீசார் மீட்டனர்.
சோனாப்பூர் பகுதி தொழிலுக்குப் பெயர் போன பகுதியாகும்.
இங்கு செல்லுபவர்கள், தங்கள் ரசனைக்கேற்ப ஆந்திரா, கர்நாடகம், பெங்காலி,மதராஸி எனத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில், அனைத்து வகைபெண்களையும் வைத்து விபச்சாரம் செய்து வருகின்றனர்.
இதன் தலைவர்கள் பெரும்பாலும் அலிகளே.
போலீஸ் ரைடு வரும் என்று தெரிந்தால் ரகசிய வழியில் பெண்களை கடத்திவிடுவார்கள்.
ஆனால் இந்தமுறை போலீசார் ரகசிய வழிகளைத் தெரிந்து கொண்டு, அங்கும் காவல்போட்டனர்.
இதனால் வேறு வழியில்லாத அலிகள் பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டுபோலீசார் மீது அடிதடியிலும், கல்லெறியிலும் ஈடுபட்டுள்ளனர்.
பிறகு, ஒருவழியாக போராடி அலிகளை அடக்கிய போலீசார், 1 சிறுமி உட்பட 10தமிழ்ப் பெண்களை மீட்டனர்.
இதுகுறித்து தமிழக டிஜிபி க்கு தகவல் அனுப்பியுள்ளனர். தமிழக அரசு இந்தப்பெண்களை தமிழகத்துக்கு அழைத்துச் செல்லும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications