தயாராகிறது தாஜ்மகால்
ஆக்ரா:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆக்ரா வரும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை வரவேற்க தாஜ்மகாலும்ஆக்ராவும் தயாராகி வருகின்றன.
ஆக்ரா முழுவதும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. குதிரைகள் முதல் வேன்கள் வரை அனைத்துவகையான வாகனங்களிலும் போலீசார் இரவு பகலாக ரோந்து சுற்றி வருகின்றனர்.
வாஜ்பாயும் பர்வேஸ் முஷாரபும் சந்திக்கவுள்ள ஜேபி பாலஸ் ஹோட்டலை சுற்றி தேசிய பாதுகாப்புப் படைகமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த ஹோட்டலுக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் சீல்வைக்கப்பட்டுவிட்டன.
ஹோட்டல் ஊழியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது மோப்ப நாய்களைக்கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர முஷாரபும் அவர் மனைவியும் ஞாயிற்றுக்கிழமை இரவில் தங்கவுள்ள அமர் விலாஸ் ஹோட்டலிலும் மிகபலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
வாஜ்பாய் இன்று நள்ளிரவில் ஆக்ரா சென்றுவிடுவார். முஷாரப் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியிருந்து ஆக்ராசெல்வார்.
ஆக்ராவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. தாஜ்மகாலும் புதுப்பிக்கப்பட்டுபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.