வாஜ்பாய்- முஷாரப் மீண்டும் 2 முறை சந்தித்து பேசுவர்
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
இந்தியா, பாகிஸ்தான் தூதுக் குழுவினர் இடையே மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
வாஜ்பாய்- முஷாரப் இடையில் நடந்த முதல் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமேபேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததாக அறிவித்துள்ளனர்.
காஷ்மீர், தீவிரவாதம் ஆகிய விவகாரங்கள் தவிர இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் செயல்களைக் கட்டுப்படுத்த முஷாரப் எப்படி உதவ முடியும்என்பது குறித்து உள்துறை அமைச்சர் அத்வானி ஒரு விவர அறிக்கையும் தயாரித்து அவரிடம் சமர்பித்ததாகக்கூறப்படுகிறது.
இரு நாடுகளும் ஆக்ரா ஒப்பந்தம் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications