இன்னும் வரவில்லை கிருஷ்ணா நீர்
சென்னை:
தமிழக எல்லைக்குள் இன்னும் கிருஷ்ணா நீர் வந்து சேரவில்லை.
சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தையடுத்து ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டது.
கிருஷ்ணா நீர் 3 நாட்களுக்கு முன்பே தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பத்தை அடையும் என்றுகூறப்பட்டது. ஆனால் இன்னும் கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்த பாடில்லை.
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நீர் வரும் கால்வாய்ப் பகுதி உள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நீரைதிருட்டுத்தனமாக எடுத்து வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் கிருஷ்ணா நீர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், சனிக்கிழமை இரவுக்குள் கிருஷ்ணா நீர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.