For Daily Alerts
Just In
விரைவில் பாகிஸ்தான் செல்கிறார் வாஜ்பாய்
ஆக்ரா:
பாகிஸ்தான் வருமாறு அந் நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் அழைத்த விடுப்பை இந்தியப் பிரதமர் வாஜ்பாய்ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து வாஜ்பாய் விரைவில் பாகிஸ்தான் செல்வார் என்று தெரிகிறது.
முன்னதாக முஷாரபிடம் பேசிய வாஜ்பாய் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியப் போர்க் கைதிகளை (இந்தியராணுவ வீரர்கள்) விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இது குறித்துப் பரிசீலிப்பதாக பர்வேஸ் உறுதியளித்தார்.
இன்னும் சிறிது நேரத்தில் தனது மனைவி ஷெபாவுடன் தாஜ்மகாலைக் காணச் செல்கிறார் பர்வேஸ் முஷாரப்.
Comments