இந்தியா-பாக். பேச்சுவார்த்தை வேஸ்ட் என்கிறார் சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆக்ராவில் நடந்து வரும் இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனதமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிறுவனர் ப.சிதம்பரம் கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வாஜ்பாய், முஷாரப் சந்திப்பால் எந்த பலனும் இல்லை. ஆனால், இந்த சந்திப்புக்குப் போய் ஏன் இவ்வளவுமுக்கியத்துவம் தருகிறார்கள் என்று தெரியவில்லை.
இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடிகாஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
ஐரோப்பிய நாடுகளில் இது போலத் தான் இரு நாட்டுப் பிரச்சனைகள் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளால்தீர்க்கப்படுகின்றன என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications