காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 15 வீரர்கள் சாவு
காஷ்மீர்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே உயர் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் காஷ்மீரில்தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
ஜம்மூ-காஷ்மீரில் லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் தாக்கியதில் 15 இந்திய ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.
இரு தற்கொலைப் படைகள் 2 இடங்களில் இந்தத் தாக்குதலை நடத்தின.
அதே போல ராணுவம் நடத்திய பல தாக்குதல்களில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் எல்லை அருகே குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஷாலால் மகம் என்ற இடத்தில் ராணுவ முகாமின் மீதுஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல பாரமுல்லாவில் இதே அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ராணுவ முகாமைத் தாக்கினர்.
இந்த இரு தாக்குதல்களிலும் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.
குப்வாராவில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை வீரர்கள் திருப்பித் தாக்கினர். ஆனால்,வீரர்களிடம் சிக்காமல் தீவிரவாதிகள் தப்பிவிட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான இரு ராணு முகாம்களும் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் ராணுவ பிரிவினர்தங்கியிருந்த முகாம்களாகும்.
20 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் 2 இடங்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சுரான்கோட் தென்சில் பகுதியில் ராணுவத்தினர் வீடு வீடாகசோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 20 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராணுவத்தினர் அவர்களை சரணடையக் கோரினர். ஆனால், அவர்கள் ராணுவத்தினரை நோக்கிதுப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்கள் திருப்பிச் சுட்டதில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பெரும்அளவிலான ஆயுதங்கள், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது:
பெரும் அளவிலான குண்டுகளுடன் பதுங்கியிருந்த 2 ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகளை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 40 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துபறிமுதல் செய்யப்பட்டது.
-
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications