சென்னையில் பலத்த மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கி வரும்செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை நகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறுநடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

நெய்வேலி, ஈரோடு, மேட்டூர் ஆகிய இடங்களில் இருந்து தண்ணீர் "இறக்குமதி" செய்யப்பட்டு, சென்னைமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆந்திராவின் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்தும் கிருஷ்ணா நீர் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள்வந்தன. ஆனால் கடந்த ஜூலை 12ம் தேதியே வரவேண்டிய கிருஷ்ணா நீர் இன்னும் வந்த மாதிரி தெரியவில்லை.

இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக ஜூலைமாதத்தில் ஓரளவு பெய்யும் மழையை எதிர்பார்த்து சென்னை நகர மக்கள் காத்திருந்தனர்.

அதிர்ஷ்ட வசமாக கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமையும்ஞாயிற்றுக்கிழமையும் இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.

இதனால் நகரில் குளிர்ச்சி நிலவியதோடு ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 24மி.மீட்டரும், சோழவரம் ஏரியில் 9 மி.மீட்டரும், புழல் ஏரியில் 4மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடிநீர் இருப்பும் அதிகரிப்பதற்கு அதிகவாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+