வாஜ்பாய்-முஷாரப் மீண்டும் பேச்சுவார்த்தை
ஆக்ரா:
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வாஜ்பாய்-முஷாரப் இடையிலான உயர் மட்ட பேச்சுவார்த்தை திங்கள்கிழமையும்தொடர்ந்தது.
இரு தலைவர்களும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் சந்தித்தனர். வாஜ்பாய் தங்கியுள்ள ஜேபி பாலஸ்ஹோட்டலுக்கு முஷாரப் வந்தார். அங்கு தான் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானியுடம் வாஜ்பாய்தீவிர ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தான் முஷாரபுடன் பேச்சுவார்த்த்ைககுச் சென்றார்.
பேச்சுவார்த்தைக்கு முன் இந்திய மற்றும் சர்வதேச பத்திரிக்கைளின் ஆசிரியர்கள் முஷாரப்பைச் சந்தித்துப் பேசினர்.அப்போது பேசிய முஷாரப்,
பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றன. காஷ்மீர் குறித்து தான் நான் அதிகம் பேசவிரும்புகிறேன். ஆனால், அதை இந்தியா விரும்பவில்லை என நினைக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை.
நான் திரும்ப பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றால் காஷ்மீர் குறித்து நான் விவாதித்துத் தான் ஆக வேண்டும்.காஷ்மீர் குறித்து நான் பேசக் கூடாது என்று இந்தியா கருதினால் எனக்கு உள்ள ஒரே வழி டெல்லியில் உள்ள எனதுகொள்ளுத் தாத்தாவின் வீட்டை வாங்கி இஙகேயே தங்கிவிடுவது தான்.
காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் பேச வேண்டியதே இல்லை என்று இந்தியா (வாஜ்பாய்) கருதுகிறது. இந்தியாதனது இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரை பேச்சுவார்த்தைகளால் அதிக பலன் ஏதும் ஏற்பட்டுவிடாது.காஷ்மீர் ஒரு மிகப் பெரிய பிரச்சனை. அதை முதலில் இந்தியா ஒத்துக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் மக்கள் இந்திய அரசை நம்பவில்லை. அதே போல பாகிஸ்தானை இந்திய மக்கள் நம்பவில்லை.
இதை மாற்றாத வரை இரு நாடுகளும் நல்லுறவை எட்டுவது சுலபமில்லை. பெரிய அளவில் பலன்கிடைக்காவிட்டாலும் கூட இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். இரு நாடுகளும்பேச்சுவார்த்தையைத் தொடங்கியது கூட பெரிய முன்னேற்றம் என்று தான் நினைக்கிறேன்.
இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தவேண்டும். அதற்கேற்ற வகையில் ஒரு திட்டத்தை இந்தப் பேச்சுவார்த்தையில் வகுக்க வேண்டும் என்றுஇந்தியாவைதக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாயை நான் மிகவும் மதிக்கிறேன். அவரது முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளையும்தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் சிறைகளில் இந்திய வீரர்கள் போர் கைதிகளாக இருந்தால் உடனடியாக அவர்களை விடுவிப்பேன்.இதில் நானே நேரடியாக தலையிட்டு உடனடியாக ஆக வேண்டியதைச் செய்வேன். நானும் ஒரு ராணுவ வீரன்தான், போர்க் கைதி என்றால் என்ன என்று தெரியும், அதன் வலியையும் நான் உணர்வேன்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு கண்டுவிட முடியாது. படிப்படியாக நாம்பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று நம்புகிறேன்.
காஷ்மீர் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம் அல்ல என்ற இந்தியாவின் கருத்தை ஏற்கிறேன்.இந்தியா கூறி வருவது போல் அது ஒரு பிரச்சனை தான்.
கார்கில் குறித்து எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். சிம்லா ஒப்பந்தத்தை மீறி சியாச்சினில் இந்தியாஊடுருவியபோது நாங்கள் அடைந்த வேதனைக்கு யார் பதில் சொல்வது. பழைய வரலாற்றை மறப்போம். இனிநல்லுறவுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.
இவ்வாறு முஷாரப் கூறினார்.
-
சாதிக்குமா Gen Z இளைஞர் படை? நேபாளத்தில் இன்று நடைபெறும் பொது தேர்தல்.. விறுவிறு ஏற்பாடுகள் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது!












Click it and Unblock the Notifications