நள்ளிரவில் பாக். புறப்பட்ட முஷாரப்
இஸ்லாமாபாத்:
நள்ளிரவில் இந்தியாவிலிருந்து கிளம்பிய பாகிஸ்தான அதிபர் பர்வேஸ் முஷாரப் அதிகாலை இஸ்லாமாபாத் போய்ச் சேர்ந்தார்.
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வரை காஷ்மீர் விவகார அமைச்சர்அப்பாஸ் ம்சர்பராஸ், ராணுவ துணைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல்ஜாம்ஷெத் குல்சார், ஐ.எஸ்.ஐ. டைரக்டர் ஜெனரல் லெப்டினண்ட் மெகமூத் அகமத் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இந்திய அதிகாரிகள் மீது பழி:
இந்தியாவில் முஷாரப் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கிய பாகிஸ்தான் தொலைக்காட்சியான பி.டி.வி. பேச்சு தோல்வியடைந்ததற்குஇந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியது.
வாஜ்பாயும் முஷாரபும் இணைந்து கூட்டறிக்கை வெளியிடத் தயாராக இருந்தனர். ஆனால், இந்த அறிக்கையை வெளியிட இந்தியவெளியுறவுத்துறை அதிகாரிகள் பிரதமர் வாஜ்பாய்க்கு அனுமதி தரவில்லை. அவர்கள் கூட்டறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் தான்அறிக்கை வெளியிட முடியவில்லை என பி.டி.வி. கூறியது.
இந்தியாவில் தான் நடத்திய பேச்சு குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் முஷாரப் விளக்குவார் எனத் தெரிகிறது.