இலங்கை: கண்ணி வெடியில் சிக்கி 9 வீரர்கள் படுகாயம்
கொழும்பு:
இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் புதன்கிழமை காலை ஏற்பட்ட கண்ணிவெடி விபத்தில் 9 ராணுவ வீரர்கள்உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளால் நடத்தியிருப்பார்கள் என்றுராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்த 10 பேரில் 9 பேர் ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் அடங்குவர்.
இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக பலாலி ராணுவமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் நடந்த உடன் அந்த இடம் ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டது. கண்ணிவெடியை வெடிக்கவைத்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .
இன்றுதான் இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இப்போட்டிகளில்பங்கேற்பதற்காக இந்திய அணியும் அங்கு சென்றுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கண்ணிவெடித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சப் -இன்ஸ்பெக்டர் கொலை:
இந்நிலையில் திரிகோணமலை அருகில் உள்ள ஆலங்கெர்னியில் பணிக்குச் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தசப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டவர்கள் அவரதுதுப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர் என ராணுவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பகுதியில், வல்வெட்டித்துறையில் குருக்கையாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிசண்டைையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவரும், பொதுமக்களில்ஒருவரும் காயமடைந்தனர் என்றும் ராணுவ அறிக்கை தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.