வெளிநாட்டில் வேலை: சென்னையில் ரூ.2 கோடி மோசடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடி பணம் வசூல் செய்து இளைஞர்களை ஏமாற்றிஉள்ளது சென்னையில் உள்ள ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம்.

இந்திய இளைஞர்கள் பெரும்பாலானவர்களின் கனவு வெளிநாட்டில் வேலை செய்து கை நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய அவர்கள் தயாராகஇருக்கிறார்கள்.

இளைஞர்களின் இந்த வெளிநாட்டு மோகத்தை பயன்படுத்திக் கொள்ளும் சில தனியார் வேலை வாய்ப்புநிறுவனங்கள், அயல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏராளமான பணம் வசூல் செய்தபின், அந்தபணத்துடன் தலைமறைவாகி விடுகின்றனர்.

ஆனாலும், பல இளைஞர்கள் இன்னும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது சென்னையில்செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி வரைமோசடி செய்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் நிச்சே டெக்னாலஜீஸ் என்னும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டுவந்தது. ஸ்ரீகுமார் மற்றும் ராஜன் என்கிற நடராஜன் ஆகிய இருவரும் இந்நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இங்கிலாந்தில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகவும், சாப்ட்வேர் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும்,ஆசிரியர் பணி வாங்கித் தருவதாகவும் கூறி இவர்கள் விளம்பரம் செய்தனர். இதற்காக, இவர்களிடம் வரும்ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.60,000 வசூல் செய்தனர்.

ஏராளமானவர்கள் பணம் செலுத்தி தங்கள் பாஸ்போர்ட்டையும் கொடுத்தனர். ரூ.2 கோடி பணம் வசூலானது. பணம்செலுத்திய அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மருத்துவ சோதனை முடிந்தபின் அவர்களைநேர்முகத் தேர்வுக்காக சென்னையில் இருக்கும் ஓட்டல் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை வருமாறு நடராஜன் கூறினார்.

ஆனால் அங்கு சென்றவர்களுக்குப் பெரும் ஏமாற்றம்தான் காத்திருந்தது. பணத்துடன் நடராஜன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. ஆனால், ஸ்ரீகுமார் போலீசில் சரணடைந்தார்.

அவர் போலீசில் கூறும்போது:

வசூல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் நடராஜன் பேரிலேயே வங்கியில் கட்டப்பட்டது. என்னிடம் பணம்எதுவும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களின் பாஸ்போர்ட் மட்டும்தான்.

நான் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறேன். எனக்கு நடராஜனுடன் தொடர்பு ஏற்பட்டது. தனக்கு இங்கிலாந்தில்பலருடனும் தொடர்பு உள்ளதால் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் தொடங்கும் திட்டத்தை மேற்கொண்டதாகக்கூறினார் நடராஜன்.

அதன்படி, தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் தொடங்கபப்பட்டது. நாங்கள் இருவரும் இணைந்து நர்ஸ்பணிக்கும், சாப்ட்வேர் துறைக்கும், ஆசிரியர் பணிக்கும் நேர்முகத் தேர்வு நடத்தினோம். மொத்தம் 169நர்சுகளையும், 60 சாப்ட்வேர் நிபுணர்களையும், 11 ஆசியர்களையும் நேர்முகத் தேர்வு செய்தோம்.

நர்சுகளை நேர்முகத் தேர்வு செய்யும்போது தன்னை ஒரு டாக்டர் போலவும், சாப்ட்வேர் வல்லுனர்களை நேர்முகத்தேர்வு செய்யும்போது சிறந்த கம்ப்யூட்டர் வல்லுனர் போலவும், ஆசியர்களை நேர்முகத் தேர்வு செய்யும்போதுசிறந்த அறிவாளி போலவும் நடராஜன் காட்டிக் கொள்வார் என்றார் ஸ்ரீகுமார்.

இதுகுறித்து, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்துடன் தலைமைறைவாகிவிட்ட நடராஜனையும், அவரதுமனைவியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜெ.யிடம் புகார் மனு கொடுத்தனர்:

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் புதன்கிழமை காலை சென்னையில் உள்ள தமிழகதலைமைச் செயலகம் சென்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் நேரில் சந்தித்து, இது சம்பந்தமாகஒரு புகார் மனுவை அவரிடம் கொடுத்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+