For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராபின் மெயின் வழக்கிலிருந்து காளிமுத்து விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தைப் பரபரப்புக்குள்ளாக்கிய ராபின் மெயின் வழக்கு விசாரணையிலிருந்து, தமிழக சட்டசபை சபாநாயகர்டாக்டர் கா. காளிமுத்து விடுவிக்கப்பட்டார்.

தமிழகத்தில், மறைந்த எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, 1985ம் ஆண்டு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தராபின் மெயின் என்பவர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, ரூ.57 லட்சம் வரை கடன் வாங்கினர்.

இந்த மோசடி சம்பந்தமாக, அப்போது அமைச்சராக இருந்த காளிமுத்து உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐதான் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன், இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று காளிமுத்து சிபிஐ நீதிமன்றத்தில் மனுகொடுத்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை புதன்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.கண்ணன், இந்த வழக்கிலிருந்து காளிமுத்துவை விடுவிப்பதாகக் கூறி உத்தரவிட்டார்.

அப்போது அமைச்சராக இருந்த காளிமுத்து மீது வழக்கு தொடர்வதற்கு, அப்போதைய ஆளுநரிடமிருந்துமுறைப்படியான எந்த அனுமதியும் பெறாத காரணத்தால், இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார் என்றுநீதிபதி கண்ணன் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 16 ஆண்டுகளாக இந்த ராபின் மெயின் வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X