வந்தே விட்டது கிருஷ்ணா நீர்!
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் ஒருவழியாக புதன்கிழமை மாலைசென்னை வந்தடைந்தது.
நாள் தோறும் ஒரு பகுதியிலாவது குடங்களுடன் தாய்மார்களின் சாலைமறியலும் நடந்தேறும்.
அதுமட்டுமல்லாமல், பொதுப்பணித்துறை அமைச்சராயிருப்பவர் குறைந்தது 2 நாளுக்கு ஒரு முறை கிருஷ்ணா நீர்வந்து கொண்டே இருக்கிறது என்று அறிக்கை விடுவதும் வழக்கம்.
சில முறை தண்ணீர் திறந்து விடப்படும், ஆனால் சென்னை வந்து சேராது. வழியிலேயே பூமியால் உறிஞ்சப்பட்டுவிட்டது என்று சொல்லப் படும்.
இந்நிலை, கடந்த 6, 7 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனால் இப்போது கிருஷ்ணா நீர் வந்தே விட்டது.
ஆமாம், இன்று (புதன்கிழமை) மாலை சென்னையை அடுத்த தாமரைக்குப்பம் என்ற இடத்திலுள்ள ஜீரோபாய்ண்ட்டுக்கு வந்துவிட்டது.
அங்கு தேக்கி வைக்கப் பட்டு பின்பு சுத்தப்படுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீராக வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.