நலப் பணியாளர் நீக்கம்: அதிமுக அரசு உத்தரவு செல்லாது
சென்னை:
தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர் நீக்கியது செல்லாது என்று தமிழ்நாடு தீர்ப்பாயம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
அடுத்து வந்த அதிமுக அரசு 1991 ம் ஆண்டு அவர்களை நீக்கி உத்தரவிட்டது. பின்னர் மீண்டும் வந்த திமுக அரசு1996 ம் ஆண்டு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கியது.
இதே சுழற்சியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கடந்த மே மாதம்மக்கள் நலப்பணியாளர்களை நீக்குவதாக அறிவித்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில்ஏ.ஆர்.மோகனம்மாள் மற்றும் டி.மதிவாணன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தமிழ்நாடு தீர்ப்பாய தலைவர் நீதிபதி அப்துல் வகாப் மற்றும் நிர்வாக உறுப்பினர் லதிகாபடால்கர் ஆகியோர் மக்கள் நலப் பணியாளர் நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும் வரும் 22 ந் தேதிக்குள் அனைவருக்கும் ஜூன் மாதத்திற்கான சம்பளம் ரூ 750 ஐ வழங்க வேண்டும்என்றும் உத்தரவிட்டுள்ளனர்.