For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்வானிக்கு ரமேஷ் தம்பி கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திங்கள்கிழமை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் தற்கொலை பற்றி நியாயமான விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் என ரமேஷின் தம்பி ரமணன் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கடிதம்எழுதி உள்ளார்.

சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் தொழிலதிபர் ரமேஷ். ஸ்டாலின் மீதான ஊழல்வழக்கில், அவருக்கு கமிஷன் வாங்கி கொடுத்ததாக இவர் மீது போலீசார் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில், அவர் திங்கள்கிழமை தனது அண்ணாநகர் வீட்டில் தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன்தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ரமேஷின் தம்பி ரமணன் கூறுகையில், போலீசாரின் தொந்தரவு தாங்காமல் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதலே ரமேஷை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். பொய் வழக்குபோடுவோம் என அவரை மிரட்டி வந்தனர். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்என்றார்.

ரமேஷ் தற்கொலை வழக்கு பற்றி நியாயமாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் ரமணன் கூறினார். "ரமேஷ் தற்கொலை வழக்கில்உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் சுதந்திரமான விசாரணை நடக்க மத்திய அரசு உதவ வேண்டும்என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X