காஷ்மீர்: தீவிரவாதிகளின் தலைவன் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஒருதீவிரவாத கும்பலின் தலைவன் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை மாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து நவ்காம் பகுதிக்குள் ஒரு கும்பல் நுழையமுயன்றது. அக்கும்பலைச் சுற்றி வளைத்த ராணுவம், அவர்களைச் சரணடையச் சொன்னது. ஆனால், அவர்கள்சரணடைய மறுத்தனர்.
இதையடுத்து, ராணுவம் அவர்களை நோக்கி சராமாரியாகச் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள்2 பேரும் லஸ்கர் - இ - டோய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது தீவிரவாதிகளும் திருப்பித் தாக்கியதில்,2 இராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இவ்வாறு தீவிரவாதிகள் ஊடுறுவ முயல்வது இது 3 வது முறையாகும்.
மேலும், புல்வாலா மாவட்டத்தில் நடந்த சண்டையில் தீவிரவாதக் கும்பலின் மாவட்டத் தலைவன் அபு தாலாஉட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இதுபற்றி இராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, "அபு தாலா கொல்லப்பட்டது தீவிரவாதிகளுக்கு பெரியஅடியாக இருக்கும். அவன்தான் இப்பகுதியில் நடத்தப்படும் தாக்குதலுக்குக் காரணமானவன்" என்றார்.
அவர்களிடமிருந்து "ஏகே" ரகத் துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
குப்வாரா மாவட்டத்திலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.