பிரேமானந்தா மீண்டும் ஆசிரமத்திற்கு விஜயம்?
திருச்சி:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமானந்தா 30 நாள் பரோலில் வியாழக்கிழமை திருச்சிவருகிறார்.
அவரிடம் அருளாசி பெறவும், குறி கேட்கவும் மக்கள் கூட்டம் அலை மோதும். அவர் நடத்தும் பிரார்த்தனைகூட்டத்திலும் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண், தன்னை பிரேமானந்தா கற்பழித்ததாக புகார் கொடுத்தார். அதைப்போலீசார் விசாரித்த போது இஞ்ஜினியர் ஒருவரை பிரேமானந்தா கொன்றதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் பிரேமானந்தாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் அவர் கடலூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், 30 நாள் பரோலில் பிரேமானந்தா வியாழக்கிழமை வெளிவருகிறார். பரோலில் வரும் பிரேமானந்தாதிருச்சி ஆசிரமத்திற்கு வர உள்ளதாக ஆசிரமத்தில் உள்ளவர்கள் தெரிலித்தனர்.
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வர உள்ளதை அடுத்து ஆசிரமம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மீண்டும் அருளாசி வழங்குதல், குறி சொல்லுதல் போன்றவற்றை பிரேமானந்தா தொடர்வாரா என்பதுகுறித்து எதுவும் தெரியவில்லை.