தஞ்சை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
தஞ்சாவூர்:
தஞ்சாவூருக்கு அருகே ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்த அதிசயம் நடந்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை தஞ்சாவூருக்கு அருகே ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தஅதிசயம் நடந்துள்ளது.
தஞ்சாவூருக்கு அருகே உள்ளது மன்னார்குடி. மன்னார்குடிக்கு அருகே உள்ள பரவக்கோட்டை என்ற கிராமத்தில்,விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக மன்னார்குடியில் உள்ள தனியார்மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு வியாழக்கிழமை குழந்தை பிறந்தது. ஆனால் எல்லோரும் அதிசயிக்கும் விதமாக அவருக்கு 4குழந்தைகள் பிறந்தது. ஆனாலும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது.
தாயும் மற்ற 3 குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். தற்போது அவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications