ஜெயாவுக்கு எதிரான திமுகவின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி:
ஜெயலலிதா முதல்வரானதை ரத்து செய்யக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது.
ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை அப்போதையஆளுநர் பாத்திமா பீவி முதல்வராக நியமித்ததை எதிர்த்து 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குதொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை அறிவித்தார்.அன்றைய தினமே திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமைவிசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திமுக சார்பில் போடப்பட்ட மனுவை மட்டும் தள்ளுபடிசெய்தனர்.
நீதிமன்றத்தை அரசியல் சண்டைக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சொன்ன நீதிபதி திமுகவின் மனுவைஏற்க முடியாது எனக் கூறி அதைத் தள்ளுபடி செய்தார்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போடப்பட்ட வேறு 4 மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரிக்கும். இந்தவிசாரணை செப்டம்பர் 4ம் தேதி தொடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications