ரவுடி "பங்க்" குமார் கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காண்டிராக்டர் தெய்வசிகாமணியை கடத்திய சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்ட்டிருந்த ரவுடி "பங்க்"குமார் சென்னை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
இவர்களில் ரமேஷ் கடந்த திங்கள்கிழமை தன் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொண்டார். பரசுராமன்சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய ரவுடி பங்க் குமாரை போலீசார் 1 மாதமாக தேடி வந்தனர். சமீபத்தில்அதிமுகவிலிருந்து விலகிய பாட்டாளி மக்கள் கட்சியுடன் இவர் நெருங்கிய தொடர்புடையவர் என்றுகூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் வியாழக்கிழமை பிற்பகல் சென்னை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் முன் சரண் அடைந்தார்.அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பங்க் குமார் சென்னைசப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications