கடிதங்களில் முரண்பாடுகள் உள்ளன: கமிஷனர்
சென்னை:
ரமேஷ் எழுதிய 2 கடிதங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறியுள்ளார்.
ரமேஷ் தனது குடும்பத்துடன் இறந்தது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது. அந்தத் துக்கத்தில் நாங்களும்பங்கெடுத்துக் கொள்கிறோம்.
இந்த பிரச்சனையில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனாலும், தீவிர விசாரனை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம். பத்திரிக்கைகளும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
ரமேஷ் எழுதியதாக வெளியிடப்பட்ட 2 கடிதங்களிலும் முரண்பாடுகள் உள்ளன.அவை இரண்டும் ரமேஷ் எழுதியதுதானா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
ரமேஷ் இறந்த அன்று ஒரு கடிதம்தான் கொடுக்கப் பட்டது. பிறகு போலீசார் நடத்தியசோதனையில் கிடைக்காத கடிதம், 72 மணி நேரம் கழித்து வெளியிடப்பட்டு உள்ளது.அந்தக் கடிதத்தை முதலில் போலீசாரிடம் கொடுக்காமல், பத்திரிக்கைகளுக்குக்கொடுத்துள்ளனர்.
15ந்தேதி எழுதியதாகக் கூறப்பட்ட முதல் கடிதத்தில் ரமேஷ், தெய்வசிகாமணியைஎனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஆனால், 13ந்தேதி எழுதியதாகக் கூறப்படும் 2 வது கடிதத்தில், தெய்வசிகாமணியைப்பற்றி நிறைய தகவல்களைக் கூறியிருக்கிறார். அதாவது தெய்வசிகாமணி, ரூ.ஒன்றரைகோடிக்கான பில்லை மாநகராட்சியிலிருந்து வாங்கியதாகவும் 2 வது கடிதத்தில்கூறியுள்ளார்.
எனவே, கடிதத்தில் உள்ள கைரேகை மற்றும் கையெழுத்து ஆகியவை பற்றி ஆய்வுசெய்ய 2 கடிதங்களையும் கோர்ட் மூலம் தடய அறிவியல் துறைக்குஅனுப்பியுள்ளோம்.
1990-1992 ல் கோவில்பட்டியில் காஞ்சனா பைனான்ஸ் என்ற கம்பெனியை ரமேஷ்நடத்தி வந்தார். அப்போது ரூ 45 லட்சம் மோசடி வழக்கில் முன் ஜாமீன் பெற்றுஇருக்கிறார். எனவே ரமேசுக்கு வழக்கு விசாரணை ஒன்றும் புதிது அல்ல.
இந்தச் சம்பவம் குறித்துத் திறந்த மனதுடன், உண்மையாக, எவ்வித பாரபட்சமின்றிவிசாரணை நடக்கிறது. உண்மைகள் கண்டிப்பாக வெளிவரும் என்றார்முத்துக்கருப்பன்.