For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனிகளின் நிலை ஓ.கே.

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனிகளின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு திருப்திகரமாகவே உள்ளது என்றுகூறப்படுகிறது.

கர்நாடக மாநில மேல் சபையில் நடந்த விவாதத்தின் போது இவ்விஷயம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 6-7 ஆண்டுகளாக இந்தியாவில் சாப்ட்வேர் தொழில் நடந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகஇத்தொழில் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிதான்இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால், பல கம்பெனிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. தற்போதும் "விப்ரோ" போன்ற பெரியகம்பெனிகளில்கூட ஆட்குறைப்பு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும், பல சிறிய சாப்ட்வேர்கம்பெனிகளும் மூடப்பட்டு வருகின்றன.

ஆனால் கர்நாடக மாநிலத்தில், கடந்த 2000-2001 நிதியாண்டில், சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.7,475 கோடி என்றும்,இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இது 35 சதவிகிதம் என்றும் கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்நானையா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி மதிப்பு 2008ல் ரூ.70,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்கா போன்ற பல நாடுகள், அங்கு நிலவும் மார்க்கெட் வீழ்ச்சியால் குறைந்த விலையில் சாப்ட்வேர்களைஉருவாக்கித் தரும் நாடுகளுக்கு காண்டிராக்ட் கொடுக்க விரும்புகின்றன. இதற்கு இந்தியா போன்றநாடுகளைத்தான் பெரிதும் அவர்கள் நம்புகிறார்கள்.

இச்சூழ்நிலையில், பெங்களூரில் மேலும் பல சாப்ட்வேர் கம்பெனிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இதனால் அரசு, பொறியியல் கல்லூரிகளில் இடங்களை 2 மடங்காக்கியுள்ளது என்று கூறினார் நானையா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X