அ.தி.மு.க. கூட்டணிக்கு வீரமணி அறிவுரை
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தங்கள் புகார்களை பகிரங்கமாகக் கூற வேண்டாம் என திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க.மீது குற்றம் சுமத்திவிட்டு கூட்டணியில் இருந்து சமீபத்தில் பா.ம.க. பிரிந்து சென்றது.
இந்நிலையில் காமராஜரின் 99வது பிறந்தநாள் விழாவில் பேசிய இளங்கோவன் தமிழகத்தில் மீண்டும் காமராஜர்ஆட்சி மலர வேண்டும் என கூறியது அ.தி.மு.கவின் கோபத்தை தூண்டியது.
இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க. பகிரங்கமாகஅறிவித்து உள்ளது.
செங்கோட்டையன் இளங்கோவனை திட்டி அறிக்கை விட, இளங்கோவன் செய்தியாளர்களை அழைத்துசெங்கோட்டையனை திட்ட, இப்படி ஒரே கூட்டணியில் இருக்கும் 2 கட்சிகளும் அறிக்கைப் போரில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க. ஆதரவாளராக இருந்துவரும் வீரமணி, புகாரை பகிரங்கமாக அறிக்கை, பேட்டிவெளியிட்டு கூட்டணியை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் குலைக்க வேண்டாம் எனகேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுக் கொள்கை அடிப்படையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மிகுந்த கூட்டணி கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications