கைது சர்ச்சையை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள ஜெ. புதுத் திட்டம்
சென்னை:
கருணாநிதி கைது செய்யப் பட்ட விதம் குறித்து தே.ஜ.கூட்டணிக் கட்சியினர் பாராளுமன்றத்தில் எழுப்பவிருக்கும்சர்ச்சையை சமாளிப்பது பற்றி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசிக்கப் பட்டது.
இதில் திமுக எம்.பிக்கள் மற்றும் தே.ஜ.கூட்டணிக் கட்சியினர், கருணாநிதி கைது செய்யப் பட்டது, மத்தியஅமைச்சர்கள் தாக்கப் பட்டது குறித்து சர்ச்சையைக் கிளப்பத் தயாராக உள்ளனர்.
மேலும், திமுக எம்.பிக்கள் சபாநாயகரிடம், மத்திய அமைச்சர்கள் மாறன் மற்றும் பாலு கைது செய்யப் பட்டவிவகாரத்தை பார்லிமெண்ட் உரிமை மீறல் பிரச்சனையாக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்து அதிமுக எம்.பிக்களும் கலந்துகொண்டனர்.
காங்கிரசுடன் மோதலை நீடித்தால் அதிமுக தனிமைப்படுத்தப்படும் என்பதால், அக்கட்சியுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும்,
மேலும் லல்லுவின் கட்சி, முலாயம்சிங் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகளின் ஆதரவையும் திரட்ட வேண்டும்என்றும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.