For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமரசம் செய்ய ஆசாத் சென்னை வந்தார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தீர்த்து வைக்க அகில இந்தியகாங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் சனிக்கிழமை சென்னை வந்தார்.

கடந்த 2 வாரமாக காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையே பெரிய அறிக்கைப் போரே நடந்து வருகிறது.

இதைத் தொடங்கி வைத்தவர் இளங்கோவன்.

இவர், சென்னையில் நடந்த காமராஜர் விழாவில், திராவிடக் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதுஎன்று பேசிவைத்தார்.

இதைக்கேட்டவுடன் சூடான அதிமுக, செங்கோட்டையனை ஏவி தாக்குதல் அறிக்கை விட்டது.

பிறகு, இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத்தும்,"இளங்கோவனைப் பெற்றதற்காக வருத்தப் படுகிறேன்",என்று கூறினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் ஐயர், இளங்கோவனை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர முடியும் என்கிற ரீதியில் பேட்டி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, டெல்லியிலிருந்து இளங்கோவனுக்கு அழைப்பு வந்தது. இந்த 2 கட்சிகளிடையே நிலவும்கருத்து வேறுபாட்டைக் களைய வேண்டுமென காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்தது.

இதற்காக குலாம் நபி ஆசாத்தை சென்னைக்கு அனுப்பி வைத்தார் சோனியா.

இன்று சென்னை வந்திறங்கிய ஆசாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாங்கள் அதிமுக -காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும்என்று நினைக்கிறோம். ஆனால் மாநில காங்கிரஸ் தவைவர்களின் பேச்சுக்குபதில் தரும் பேட்டியில் தேவையில்லாமல் சோனியாவின் பெயரை இழுக்காமல் இருக்குமாறு அதிமுகதலைவர்களுக்கு அக்கட்சித் தலைமை கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அதிமுக தலைவர்செங்கோட்டையனின் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமானது. வருத்தமாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் மனித உரிமை மீறல் இருப்பதாக சோனியா கூறவில்லை ".

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் மூப்பனாரைச் சந்தித்தார்.

மேலும் இவர், காங்கிரஸ் தலைவர்களையும், அதிமுக தலைவி ஜெயலலிதாவையும் சந்தித்து பேச்சு நடத்தவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X