கார்கிலில் இந்தியா-பாக் பீரங்கி சண்டை: 4 பாக். வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு- காஷ்மீரில் கார்கில் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான்ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பதில்தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தற்போது மீண்டும்.வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கார்கிகலில் உள்ளஇந்திய ராணுவ நிலைகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தாக்குதல் பூஞ்ச்மாவட்டத்தின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகில் நடந்தது. தீவிரவாதிகள்இந்தியாவிற்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குபீரங்கி தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் 4பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் காயமடைந்த ஒருராணுவ வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பத்காம் மலைப்பகுதியில் உள்ள கோமா-காலு மற்றும் கார்கில் மலைப் பகுதிகளில்காலை 5 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் எந்த சேதமும்ஏற்படவில்லை.
தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் விட்டுவிட்டு தாக்குதல் நடத்தினர். இந்தியராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில்இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.