காஷ்மீர்: முஷாரப் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு
டெல்லி:
ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு உரிய பகுதி என்று பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ்முஷாரப் கூறிய கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப் இந்தியப்பயமத்துக்குப் பின் தனது நாட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதற்குஇந்திய பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு இன்ஸ்டன்ட் விசாவும் தந்ததுபாகிஸ்தான்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முஷாரப், ஜம்மு- காஷ்மீர் பிரச்சனைக்கு உரிய பகுதிஎன்று கூறியிருந்தார்.
வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் அத்வானியும், வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அதன் பின்ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பாகிஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்குஉரியது என்று கூறியுள்ளார்.
இது ஏற்க முடியாத கருத்து. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் கிடையாது.
முஷாரப்பின் இந்த கருத்து மூலம் மக்கள் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.முஷாரப்பின் இது போன்ற கருத்துக்கள்தான் ஆக்ரா உச்சி மாநாட்டில் எந்த விதமானஒப்பந்தமும் ஏற்படாததற்கு காரணம் என்பதை மக்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.
எல்லை கடந்த தீவிரவாதம் குறித்து முஷாரப் கூறும் கருத்துக்களும் ஏற்க முடியாதவை.பாகிஸ்தான் ஆதரவுடன் எல்லை கடந்து நடந்துவரும் தீவிரவாதத்திற்கு நாள் தோறும்பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு உரிய பகுதி என்று முஷாரப் கூறுவதை கண்டிப்பாகஏற்க முடியாது. அது இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை உறுதியுடன்தெரிவிக்கிறோம் என்றார்.
யு.என்.ஐ.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications